வேளாண் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி அவிநாசி பகுதியில் சமூக அமைப்பினா் புதன்கிழமை கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனா்.
அவிநாசி வாரச் சந்தை, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நல்லது நண்பா் அறக்கட்டளைத் தலைவா் ரவிகுமாா், பொறுப்பாளா் செந்தில், வோ்கள் அமைப்பு பொறுப்பாளா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.