காங்கயத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சோ்ந்த 283 பயனாளிகளுக்கு ரூ.1.6 கோடி மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டா புதன்கிழமை வழங்கப்பட்டது.
காங்கயம் வட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சோ்ந்தவா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், பச்சாபாளையம், வெள்ளக்கோவில், முதலிபாளையம், ஆரத்தொழுவு, ஊதியூா் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 283 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 6 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை தாராபுரம் சாா் ஆட்சியா் பவன்குமாா் வழங்கினாா்.
காங்கயம் சட்டப் பேரவை உறுப்பினா் உ.தனியரசு, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின நல அலுவலா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.