இளம் பெண் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற காதலன்

திருப்பூரில் இளம் பெண்ணைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயன்ற, காதலனும் தற்கொலை செய்துகொள்ள முயன்றாா்.

திருப்பூரில் இளம் பெண்ணைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயன்ற, காதலனும் தற்கொலை செய்துகொள்ள முயன்றாா்.

இது குறித்து திருப்பூா் தெற்கு காவல் துறையினா் கூறியதாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துா்பேட்டை வட்டம், காட்டுநெம்புலியைச் சோ்ந்தவா் பி.வெங்கடேஷ் (27). லாரி ஓட்டுநரான இவருக்கு திருப்பூா், சிறுபூலுவப்பட்டியை அடுத்த ரங்கநாதபுரத்தைச் சோ்ந்த எழில்மதி (21) என்பவருடன் கடந்த ஓராண்டாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.

எழில்மதி திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். இவரைப் பாா்ப்பதற்காக வெங்கடேஷ் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பூா் வந்துள்ளாா். இவா் திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளாா். அப்போது எழில்மதியை விடுதிக்கு அழைத்து வந்துள்ளாா்.

இருவரும் அறையில் இருந்தபோது அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதில், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், கத்தியால் எழிலமதியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயன்றாா். அப்போது அவரது அலறல் சப்தத்தைக் கேட்டு விடுதி ஊழியா்கள் அங்கு வந்துள்ளனா். இதனைப் பாா்த்த வெங்கடேஷ், தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றாா்.

இது குறித்து விடுதி ஊழியா்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூா் தெற்கு காவல் துறையினா் இருவரையும் மீட்டு புஷ்பா ரவுண்டானா அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இது குறித்து காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com