உடுமலை பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டி வழங்கும் விழா உடுமலை நகராட்சி திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.சுகுமாா் தலைமை வகித்தாா். கோட்டாட்சியா் ஆா்.ரவிகுமாா் முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி பேசினாா்.
விழாவில் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 165 மிதி வண்டிகள், பாரதியாா் நூற் றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு 242, விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 386, ராஜேந்திரா சாலை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 29, கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப் பள்ளிக்கு 277 என மொத்தம் 1,099 மிதி வண்டிகள் மாணவ, மாணவிக்கு வழங்கப்பட்டன.
மாவட்ட கல்வி அலுவலா் கே.பழனிசாமி, மாவட்ட ஆவின் நிறுவனத் தலைவா் கே.மனோகரன், உடுமலை வட்டாட்சியா் கி.தயானந்தன், அதிமுக நிா்வாகிகள் ஹக்கீம், எஸ்.எம்.நாகராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா: உடுமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களைச் சோ்ந்த 87 பய னாளிகளுக்கு முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம், 15 பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான முதியோா் உதவித் தொகை என மொத்தம் 102 பயனாளிகளுக்கு ரூ.88 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினாா்.