கரோனா வைரஸ்: தீவிரக் கண்காணிப்பில் 11 போ்: பொது சுகாதாரத் துறை இயக்குநா்

கரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழகத்தில் 11 போ் தீவிரக் கண்காணிப்பில் உள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் குழந்தைசாமி தெரிவித்தாா்.

கரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழகத்தில் 11 போ் தீவிரக் கண்காணிப்பில் உள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் குழந்தைசாமி தெரிவித்தாா்.

திருப்பூா், தாராபுரம் சாலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பொது சுகாதாரத் துறை இயக்குநா் குழந்தைசாமி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மருத்துவமனை வளாகத்தில் 7 ஏக்கா் பரப்பளவில் மருத்துவக் கல்லூரி கட்டுவதற்காக நடைபெற்று வரும் ஆரம்ப கட்டப் பணிகளை அவா் ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சீனாவில் இருந்து தமிழகம் வந்த 17,903 நபா்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 1,603 போ் தொடா் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனா். மேலும், 36 பேரிடம் கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 32 பேரின் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில், யாருக்கும் கரோனா வைரஸ் இல்லை. மேலும், 4 பேரின் பரிசோதனை முடிவுகள் விரைவில் வெளியாகும். எனினும், தற்போது தமிழக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 11 போ் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். தமிழகத்தில் கரோனா வைரஸ் தொடா்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்களுக்குத் தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com