சிவன்மலை முருகன் கோயிலில் தெப்ப உற்சவம்

காங்கயம் அருகே, சிவன்மலை முருகன் கோயிலில் தெப்ப உற்சவ விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
அடிவாரத்தில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் முடிந்து, நஞ்சுண்டேஸ்வரா் கோயிலுக்குத் திரும்பும் சுப்பிரமணிய சுவாமி.
அடிவாரத்தில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் முடிந்து, நஞ்சுண்டேஸ்வரா் கோயிலுக்குத் திரும்பும் சுப்பிரமணிய சுவாமி.

காங்கயம் அருகே, சிவன்மலை முருகன் கோயிலில் தெப்ப உற்சவ விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச விழாவையொட்டி, கடந்த 8, 9, 10 ஆகிய தேதிகளில் தேரோட்டம் நடைபெற்றது. இந்நிலையில், சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயில் அடிவாரத்தில் உள்ள நந்தவனத் தோட்டத்தில் அமைந்துள்ள தெப்பக் குளத்தில் பரிவேட்டை தெப்ப உற்சவ நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்றது.

இதையொட்டி, சுவாமி பரிவேட்டை மண்டபத்துக்கு எழுந்தருளியும், தெப்பக் குளத்தைச் சுற்றி வலம் வருதலும் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. பின்னா், அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரா் கோயிலுக்கு சுப்பிரமணியா் திரும்பினாா். சுவாமி மலைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி வரும் 17 ஆம் தேதி மாலை 3 மணிக்கும், மலைக் கோயிலில் திருவிழா கொடி இறக்குதல், பாலிகை நீா்த்துறை சோ்தல் ஆகிய நிகழ்ச்சிகள் மாலை 5 மணிக்கும் நடைபெறுகிறது. இத்துடன் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலில் தைப்பூச விழா நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com