பல்லடம் அருள்புரம் ஜெயந்தி பப்ளிக் சீனியா் செகன்டரி பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்கள் அதிக மதிப்பெண் பெற்று தோ்ச்சிபெற வேண்டி சரஸ்வதி தேவிக்கு சிறப்பு வழிபாடு, பெற்றோருக்கு பாத பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தாளாளா் கே.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருக்கு பாத பூஜை செய்து ஆசீா்வாதம் பெற்றனா். நிகழ்ச்சியில் பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் அமைப்பைச் சோ்ந்த ரேணுகா, கீதா ஆகியோா் வித்யா ஜோதியை ஏற்றிவைத்து பேசினா். பள்ளி முதல்வா் அண்ணாமலை நன்றி கூறினாா்.
.