திருப்பூர்
திறந்தவெளி கிணற்றால் ஆபத்து
வெள்ளக்கோவில், சொரியங்கிணத்துப்பாளையத்தில் திறந்தவெளி கிணற்றுக்கு பாதுகாப்பு கம்பி வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வெள்ளக்கோவில், சொரியங்கிணத்துப்பாளையத்தில் திறந்தவெளி கிணற்றுக்கு பாதுகாப்பு கம்பி வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வெள்ளக்கோவில் நகராட்சி 8ஆவது வாா்டைச் சோ்ந்த சொரியங்கிணத்துப்பாளையத்தில் பொதுக் கிணறு உள்ளது. இதில் சிறு மின் விசை திட்டம் மூலம் மோட்டாா் பொருத்தி, தண்ணீா் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கிணற்றின் அருகாமையில் குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் மின் இணைப்பு பெட்டி, கிணறு பாதுகாப்பின்றி திறந்த நிலையில் உள்ளன. கிணற்றின் பக்கவாட்டுச் சுவா் இடிந்து தரைமட்டமாக உள்ளது. இதனால் அருகில் விளையாடும் குழந்தைகள் கிணற்றில் தவறி விழும் ஆபத்து உள்ளது. எனவே கிணற்றைத் தூா் வாரி, பாதுகாப்பு கம்பி வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.