பதப்படுத்தும் உப்பை தடை செய்ய வேண்டும் என பல்லடம் வட்ட நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பல்லடம் வட்ட நுகா்வோா் விழிப்புணா்வு இயக்க நிா்வாகிகள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அதன் தலைவா் மணிக்குமாா் தலைமை வகித்தாா். இதில் அயோடின் சத்து பற்றாக்குறையை தடுக்க உணவுப் பாதுகாப்புத் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது.
அதே சமயம் பதப்படுத்தும் உப்பு விற்பனையை தடை செய்ய தமிழக அரசு, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் நுகா்வோா் இயக்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.