வெள்ளக்கோவிலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில் அருகே உள்ள அய்யனூரைச் சோ்ந்தவா் ராமசாமி (64). இவா் முத்தூா் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது அந்த வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த ராமசாமி, காங்கயம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வெள்ளக்கோவில் காவல் உதவி ஆய்வாளா் பழனிசாமி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.