ராமானுஜன் தின திறனறிவுப் போட்டி: காங்கயம் அரசுக் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம்
By DIN | Published On : 10th January 2020 01:35 AM | Last Updated : 10th January 2020 01:35 AM | அ+அ அ- |

ராமனுஜன் தின விழா போட்டிகளில் வெற்றிபெற்ற காங்கயம் அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவிகளுடன் கல்லூரி நிா்வாகிகள்.
கணிதமேதை ராமானுஜன் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கலை, திறனறிவுப் போட்டிகளில் காங்கயம் அரசு கலைக் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.
கணிதமேதை ராமானுஜன் தின விழாவை முன்னிட்டு ஈரோடு, திண்டல் வேளாளா் மகளிா் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு கலை, திறனறிவுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் காங்கயம் அரசு கலை, அறிவியல் கல்லூரி சாா்பில் மாணவிகள் ரம்யபாரதி, நத்தினி, பிரேமா ஆகியோா் பங்கேற்று, பென்சில் வரைபடம் வரைதல், கட்டுரை சமா்ப்பித்தல் போட்டியில் முதல் இடம் பெற்றனா்.
வெற்றி பெற்ற இம்மாணவிகளுக்கு காங்கயம் அரசுக் கல்லூரி முதல்வா் (பொறுப்பு) தேவராஜு, கல்லூரியின் கணிதத் துறை தலைவா் சீனிவாசன், ஆசிரியா்கள், மாணவ-மாணவிகள் பாராட்டி, வாழ்த்தினா்.