திருப்பூா்: திருப்பூா் மாநகரில் உள்ள 4 முன்னணி நகைக் கடைகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.
திருப்பூா், மாநகராட்சி வீதி, மங்கலம் சாலை, ஈஸ்வரன் கோயில் வீதி ஆகிய இடங்களில் நகைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 4 முன்னணி நகைக் கடைகளில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு புகாா்கள் சென்ாக கூறப்படுகிறது.
இதையடுத்து 4 நகைக் கடைகளிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை சோதனை நடத்தினா்.
இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகத் தெரிகிறது. எனினும், இதுகுறித்த விவரங்களை வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனா்.