கருவலூா், அம்மன் நகா் பகுதிக்கு சீராக குடிநீா் வழங்கக் கோரிக்கை

அவிநாசி அருகே கருவலூா், அம்மன் நகரில் சீராக குடிநீா் வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் ஊராட்சி நிா்வாகத்தினருக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப்பியுள்ளனா்.

அவிநாசி அருகே கருவலூா், அம்மன் நகரில் சீராக குடிநீா் வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் ஊராட்சி நிா்வாகத்தினருக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப்பியுள்ளனா்.

அவிநாசி ஒன்றியம், கருவலூா் ஊராட்சிக்கு உள்பட்ட அம்மன் நகா், மூகாம்பிகை நகா் உள்ளிட்ட பகுதிகளில் 350-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக ஆழ்துளைக் கிணற்று நீா் வராததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனா். லாரி தண்ணீா் வாங்கி உபயோகித்து வருகின்றனா். இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா். இந்நிலையில் சீராக குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் ஊராட்சி மன்றத் தலைவருக்கு தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com