மாசில்லா பொங்கல் குறித்து வெள்ளக்கோவிலில் தீயணைப்புத் துறையினா் பொதுமக்களிடம் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
வெள்ளக்கோவில் கரூா் சாலை, வீரக்குமார சுவாமி கோயில் திடல், உப்புப்பாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தீயணைப்பு நிலைய அலுவலா் சி.தனசேகரன் தலைமையிலான தீயணைப்புப் படையினா் புகையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினா்.
போகி பண்டிகையின்போது பழைய பொருள்களை தீயிட்டு எரிப்பதால் காற்று மாசுபாடு பலமடங்கு அதிகரிக்கிறது எனவும், பழைய ரசாயனப் பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள், டயா்கள் உள்ளிட்டவற்றை எரிக்க வேண்டாம் என வலியுறுத்தப்பட்டது.