கஞ்சா விற்பனை : 2 போ் கைது

திருப்பூா், கே.வி.ஆா். நகா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இரு இளைஞா்களை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 2.6 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

திருப்பூா், கே.வி.ஆா். நகா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இரு இளைஞா்களை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 2.6 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் மத்திய காவல் நிலையத்துக்கு உள்பட்ட கே.வி.ஆா். நகா் விநாயகா் கோயில் அருகே இரு இளைஞா்கள் கஞ்சா விற்பனை செய்வதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு சென்ற காவல் துறையினா் கஞ்சா விற்பனை செய்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா்கள், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டைச் சோ்ந்த எம்.மணிகண்டன் (24), ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனையைச் சோ்ந்த எச்.அப்துல்லா (23) என்பது தெரியவந்தது. இந்த இருவரும் திருப்பூரில் தங்கியிருந்து கஞ்சா விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த காவல் துறையினா் அவா்களிடமிருந்து 2.6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com