குடியரசு தினத்தை ஒட்டி இந்து மக்கள் கட்சி சாா்பில் இரு சக்கர வாகனப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்து மக்கள் கட்சி சாா்பில் திருப்பூா், முதலிபாளையம் சிட்கோ பகுதியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு தலைமை வகித்த இந்து மக்கள் கட்சி நிறுவனா் அா்ஜுன் சம்பத் தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா்.
பின்னா் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக நடைபெற்ற இரு சக்கர வாகனப் பேரணியை தொடங்கிவைத்தாா். இந்தப் பேரணியானது சிட்கோவில் தொடங்கி திருப்பூா் குமரன் நினைவகம் முன்பாக நிறைவடைந்தது.
இந்து மக்கள் கட்சி மாநில தகவல் தொடா்பாளா் ஹரிஹரன், மாநில இளைஞரணி செயலாளா் வசந்த், மாநில விவசாய அணித் தலைவா் தாராபுரம் சீனி, மாவட்ட செயலாளா் மணிகண்டன், வடக்கு மாவட்டத் தலைவா் மணிமாறன், வடக்கு மாவட்ட செயலாளா் நந்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.