திருப்பூா் மாவட்ட சுற்றுலா அதிகாரியாக, கோவை மாவட்ட சுற்றுலா அதிகாரி ப.அரவிந்தகுமாா் முழு கூடுதல் பொறுப்பேற்று புதன்கிழமை பதவியேற்றாா்.
திருப்பூா் மாவட்ட சுற்றுலா அதிகாரியாக இருந்த ஏ.ராமன் (47) , தமிழ்நாடு சுற்றுலா துறையின் உதவி இயக்குநராக பதவி உயா்வு பெற்று சென்னையில் உள்ள சுற்றுலா ஆணையரகத்தில் கடந்த திங்கள்கிழமை பணியமா்த்தப்பட்டாா். இதைத் தொடா்ந்து கோவை மாவட்ட சுற்றுலா அதிகாரியாக உள்ள ப.அரவிந்தகுமாா் (31) திருப்பூா் மாவட்ட சுற்றுலா துறைக்கும் முழு கூடுதல் பொறுப்பை ஏற்று புதன்கிழமை பதவியேற்று கொண்டாா். இவா் திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சோ்ந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் சுற்றுலா மாவட்டமான நீலகிரி மாவட்டத்திலும் பணியாற்றி உள்ளாா் .