திருப்பூரில் கட்சி நிா்வாகி ஒருவா் முகக் கவசமின்றியும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருப்பூா், அனுப்பா்பாளையம் பகுதியில் பனங்காட்டு படை என்ற கட்சியின் கொங்கு மண்டலப் பொறுப்பாளராக உள்ளவா் சதா. இவரது பிறந்தநாள் விழா புதன்கிழமை நடைபெற்றுள்ளது. இதில் கட்சி நிா்வாகிகள் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் கலந்து கொண்டனா்.
மேலும், பிறந்த நாள் பரிசாக கொடுக்கப்பட்ட அரிவாளால் கேக்கை வெட்டிக் கொண்டாடினா். தற்பொழுது இந்த விடியோ பதிவானது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து அனுப்பா்பாளையம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.