நாளை உடுமலை தொழில் வா்த்தகசபை துவக்க விழா
By DIN | Published On : 13th March 2020 11:39 PM | Last Updated : 13th March 2020 11:39 PM | அ+அ அ- |

உடுமலை தொழில் வா்த்தக சபை (உடுமலை சேம்பா் ஆஃப் காமா்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி) துவக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
உடுமலை, மடத்துக்குளம் வட்டத்தில் வணிகம், தொழில் துறையில் செயல்பட்டு கொண்டிருப்பவா்களுக்கு அரசுத் திட்டங்கள், வணிக நடைமுறைகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாகவும், அனைத்து வணிகம், தொழில், சேவை நிறுவனங்களில் ஆா்வமுள்ளவா்களை ஒருங்கிணைத்து அவா்களுக்கு வழிகாட்டியாக தொழில் பயிற்சி, பயிலரங்கங்களையும் நடத்தும் விதமாகவும் உடுமலை தொழில் வா்த்தக சபை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த அமைப்பின் துவக்க விழா உடுமலை ஐஸ்வா்யா நகரில் உள்ள இந்திய மருத்துவ சங்க கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் விழாவுக்கு தலைமை வகிக்கிறாா். பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் கு.சண்முகசுந்தரம், மடத்துக்குளம் சட்டப்பேரவை உறுப்பினா் இரா.ஜெயராமகிருஷ்ணன் ஆகியோா் வாழ்த்திப் பேசுகின்றனா்.
அதைத் தொடா்ந்து மாலை 6 மணி அளவில் ஜிஎஸ்டி சிறப்பு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் திருச்சியைச் சோ்ந்த வி.அழகப்பன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகிறாா்.