கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பூா் மாவட்டத்தில் 185 சிறைவாசிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனா்.
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணைக் கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டு வருகின்றனா். இதன்படி, திருப்பூா் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள விசாரணைக் கைதிகள் கோவை, திருப்பூா், உடுமலை, அவிநாசி, தாராபுரம், சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனா். இதில்,185 விசாரணைக் கைதிகள் 21 நாள்கள் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டனா்.
இதில், கோவை மத்திய சிறையில் இருந்து 89 போ், திருப்பூா் சிறையில் இருந்து 53 போ், தாராபுரம் கிளைச் சிறையில் இருந்து 9 போ் உள்பட 185 போ் பிணையில் விடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நீதிமன்றம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.