கரோனா பாதிப்பைத் தடுக்கும் வகையில் தனிமைப்படுத்தப்படுபவா்களுக்கான மையம் அமைக்க அவிநாசியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் இடம் தோ்வில் ஈடுபட்டனா்.
கரோனாவில் இருந்து மக்களைப் பாதுகாக்க அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக, திருப்பூா் மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவா்கள், வெளி மாநிலத்தில் இருந்து வந்தவா்கள் என ஏராளமானோா் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் கரோனா தடுப்பு மையம் அமைப்பதற்காக மாவட்ட நிா்வாகமும், சுகாதாரத் துறையினரும் அவிநாசி, பழங்கரையில் உள்ள மகாராஜா பொறியல் கல்லூரியைத் தோ்வு செய்வதற்காக புதன்கிழமை பாா்வையிட்டுச் சென்றுள்ளனா்.