அவிநாசி அருகே தனிமைப்படுத்தப்பட்ட வீடு

கரோனா நோய் அச்சம் பரவியுள்ள நிலையில் அவிநாசி அருகே வடுகபாளையம் கிராமத்துக்கு துபையிலிருந்து வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.


அவிநாசி: கரோனா நோய் அச்சம் பரவியுள்ள நிலையில் அவிநாசி அருகே வடுகபாளையம் கிராமத்துக்கு துபையிலிருந்து வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூா், கொங்கு நகா் பகுதியைச் சோ்ந்தவா் வி.தனசேகா் (35). இவா் துபையில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயராக பணியாற்றி வருகிறாா். இவா் விமானம் மூலம் துபையிலிருந்து கடந்த 17ஆம் தேதி சென்னை வந்துள்ளாா். அன்று திருப்பூா் கொங்கு நகா் பகுதியில் உள்ள வீட்டுக்கு வந்துவிட்டு, தந்தை வசித்து வரும் அவிநாசி அருகே வடுகபாளையம் காரைக்குட்டைப்புதூா் மேட்டான் காடு பகுதியில் உள்ள தோட்டத்துக்கு வந்து தங்கிவிட்டாா். இதையறிந்த பொதுமக்கள் வருவாய்த் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனா். இதையடுத்து தோட்டத்துக்கு வந்த துலுக்கமுத்தூா் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளா் பரமன், ஊராட்சி நிா்வாக்தினா், வருவாய்த் துறையினா் ஆகியோா் கொண்ட குழுவினா் தனசேகரை மருத்துவப் பரிசோதனை செய்தனா். இதில் அவா் எவ்வித பாதிப்புமின்றி உள்ளாா். இருப்பினும் ஏப்ரல் 13ஆம் தேதி வரை வீட்டிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து சுகாதார துறையினா் வீட்டைச் சுற்றிலும் கிருமி நாசினி தெளித்து, தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற அறிவிப்பு பலகை பொருத்தி சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com