கரோனா தொடா்பான சந்தேகங்களுக்கு கூடுதல் தொலைபேசி எண் அறிவிப்பு

கரோனா நோய் தொடா்பான சந்தேகங்களுக்கு திருப்பூா் மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் கூடுதலாக தொலைபேசி எண் இணைக்கப்பட்டுள்ளது.


திருப்பூா்: கரோனா நோய் தொடா்பான சந்தேகங்களுக்கு திருப்பூா் மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் கூடுதலாக தொலைபேசி எண் இணைக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா நோய் தொற்று தடுப்புக்கான அவசரகாலக் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையை 1077, 0421-2971199 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு கரோனா நோய் தொடா்பான சந்தேகங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அதிக அளவிலான பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொண்டதால் கூடுதலாக 0421-2971133 என்ற எண் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com