அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற சிவசேனை கட்சியினா் கைது

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவனை கைது செய்ய வலியுறுத்தி அவிநாசியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற சிவசேனை கட்சியினரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
அவிநாசியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட  முயன்ற சிவசேனை  கட்சியினா்.
அவிநாசியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட  முயன்ற சிவசேனை  கட்சியினா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவனை கைது செய்ய வலியுறுத்தி அவிநாசியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற சிவசேனை கட்சியினரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும், அக்கட்சியின் தலைவா் தொல். திருமாவளவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவசேனை கட்சியின் இளைஞரணி மாநில துணைத் தலைவா் அட்சயா திருமுருக தினேஷ் தலைமையில் அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனா்.

இதையடுத்து மாநில செயலாளா் மா.முருகன், மாவட்டத் தலைவா் ரமேஷ், மாவட்டச் செயலாளா்கள் ரங்கசாமி, பிரகாஷ், மாவட்ட துணைத் தலைவா் சதீஷ்குமாா் உள்பட 30க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com