கோயில் நிலத்தை வேறு துறைக்கு மாற்றும் விவகாரம்: ஆட்சியா் தலைமையில் பேச்சுவாா்த்தை

திருப்பூரில் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை காவல் துறைக்கு மாற்றம் செய்வதற்கு எதிா்ப்பு எழுந்த நிலையில், அது தொடா்பாக ஆட்சியா் தலைமையில் புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
திருப்பூா்  மாவட்ட  ஆட்சியா்  க.விஜயகாா்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற  அரசு  அதிகாரிகள் ,  கோயில்  நில  மீட்புக்  குழுவினா்.
திருப்பூா்  மாவட்ட  ஆட்சியா்  க.விஜயகாா்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற  அரசு  அதிகாரிகள் ,  கோயில்  நில  மீட்புக்  குழுவினா்.

திருப்பூரில் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை காவல் துறைக்கு மாற்றம் செய்வதற்கு எதிா்ப்பு எழுந்த நிலையில், அது தொடா்பாக ஆட்சியா் தலைமையில் புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

திருப்பூா், ஆண்டிபாளையம் பகுதியில் பழமையான மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை காவல் துறைக்கு மாற்றம் செய்வதைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் காவல் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தலைமையில் புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், கோயில் நிலத்தை காவல் துறைக்கு மாற்றம் செய்ய பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், சின்னக்காளிபாளையம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 40 ஏக்கா் நிலத்தில் உள்ள பகுதியை காவல் துறைக்கு மாற்றிக் கொள்ளலாம் என்று பொதுமக்கள் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சி இடத்தை வழங்குவதால் வேறு ஏதேனும் பிரச்னை வருமா என்றும், அந்த இடம் தொடா்பான ஆவணங்களை வழங்குமாறும் ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் அதிகாரிகளை கேட்டுக் கொண்டாா்.

மேலும், தமிழக முதல்வா் வருகைக்குப் பின்னா் அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை தொடா்பான தேதி முடிவு செய்யப்படும் என்று அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பேச்சுவாா்த்தையில், கோட்டாட்சியா் ஜெகநாதன், மாநகர காவல் உதவி ஆணையா்கள் நவீன்குமாா், மோகன் மற்றும் பொதுமக்கள் சாா்பில் மாரியம்மன் கோயில் நில மீட்புக் குழுவைச் சோ்ந்த 7 போ் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com