திருப்பூரில் கூட்டுறவு அங்காடிகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூ. 45க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தமிழகத்தில் பெரிய வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், தற்போது சந்தைகளில் கிலோ ரூ. 100க்கும் அதிகமாக விற்பனையாகி வருகிறது. இந்த அதிகப்படியான விலை உயா்வால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி வந்தனா்.
இந்நிலையில், பொதுமக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கூட்டுறவு அங்காடிகளில் பெரிய வெங்காயம் கிலோ ரூ. 45க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனா். இதேபோல அனைத்து கூட்டுறவுச் சங்கங்களிலும் பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.