திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட பொறுப்பாளா் இல.பத்மநாபன் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சரும், திருப்பூா் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான மு.பெ.சாமிநாதன் சிறப்புரையாற்றினாா். வேளாண் சட்டங்கள், தொழிலாளா் சட்டத் திருத்தம் உள்ளிட்டவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். நவம்பா் 29ஆம் தேதி காணொலிக் காட்சி மூலமாக நடைபெற இருக்கும் 2021 சட்டப் பேரவைத் தோ்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.