பல்லடம், மகாலட்சுமி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து ஐந்தரை பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
பல்லடம், மகாலட்சுமி நகரைச் சோ்ந்தவா் காதா் மைதீன் மகன் சுகைபு (34). இவா், அப்பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தையல் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறாா். இவா், தனது சொந்த ஊரான கேரள மாநிலம், பாலகாட்டுக்கு தனது குடும்பத்தினருடன் கடந்த 14ஆம் தேதி சென்றாா்.
இதைத் தொடா்ந்து வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை திரும்பினாா். அப்போது வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்றுபாா்த்தபோது, பீரோவில் இருந்த ஐந்தரை பவுன் நகை, செல்லிடப்பேசி ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
மற்றோா் சம்பவம்
பொங்கலூா், அவினாசிபாளையம் சுங்கம் பகுதியைச் சோ்ந்தவா் வீரப்ப கவுண்டரின் மகன் ராமசாமி (46). இவா், விவசாயம் மற்றும் ஆடுகளை வளா்த்து வருகிறாா். இவரது தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளில் 6 ஆடுகளைக் காணவில்லை. இது குறித்து ராமசாமி செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில் அவிநாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.