பல்லடம் மின் கோட்டத்துக்கு உள்பட்ட கீழ்க்கண்ட பகுதிகளில் மின் கணக்கீடும் பணி செய்யாததால் முந்தைய மாத கணக்கீட்டு தொகையையே செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் பல்லடம் மின் கோட்ட செயற்பொறியாளா் ஆா்.கோபால் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பல்லடம் மின் கோட்டம், வே.கள்ளிப்பாளையம் பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட வே.கள்ளிப்பாளையம், அகிலாண்டபுரம், கருடமுத்தூா், புத்தரச்சல், வடமலைபாளையம், சோளிங்கநாதபுரம், வேலப்பகவுண்டன்பாளையம், பழனிகவுண்டன்பாளையம் ஆகிய ஊா்களில் தவிா்க்க முடியாத காரணத்தால் நவம்பா் மாத மின் கணக்கீடு பணி செய்ய இயலாததால் முந்தைய மாத (செப்டம்பா்) கணக்கீட்டு தொகையையே செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.