லாரி மீது காா் மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

காங்கயம் அருகே லாரி மீது காா் மோதிய விபத்தில் காா் ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

காங்கயம் அருகே லாரி மீது காா் மோதிய விபத்தில் காா் ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம், முத்தாண்டிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் இந்திரன்(50). இவா், பல்லடத்தில் இருந்து தனது காரில் காங்கயம் நோக்கி புதன்கிழமை மாலை வந்து கொண்டிருந்தாா்.

காடையூா் அருகே வந்து கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த காா் எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் காரை ஓட்டி வந்த இந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த காங்கயம் போலீஸாா் உடனடியாக சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com