குழந்தைகள் மீதான தீங்கிழைத்தலுக்கு எதிரான தின விழிப்புணா்வு நிகழ்ச்சி திருப்பூா் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் சைல்டுலைன் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ரயில் நிலைய மேலாளா் செல்வகுமாா் தலைமை வகித்தாா். இதில் ரயில் பயணிகளுக்கு குழந்தைகள் உரிமைகள், குழந்தை உரிமை மீறல்களினால் ஏற்படும் தீங்குகள், தற்போது உள்ள சூழலில் குழந்தைகளை பாதுகாப்பதன் அவசியம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இருப்புப் பாதை காவல் நிலைய ஆய்வாளா் வடிவுக்கரசி, ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் பெரியசாமி, இருப்பு பாதை காவல் நிலைய குழந்தைகள் நல காவலா் லதா, சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளா் கதிா்வேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.