மூலனூரில் ரூ. 43 லட்சத்துக்குபருத்தி விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை ரூ. 43 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை ரூ. 43 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு திருச்சி, கரூா், திண்டுக்கல், கோவை, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 257 விவசாயிகள் தங்களுடைய 2,447 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இவற்றை வாங்குவதற்காக திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 20 வணிகா்கள் வந்திருந்தனா். 830 குவிண்டால் வரத்து இருந்தது. குவிண்டால் ரூ.4,500 முதல் ரூ.5,856 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.5,300. திருப்பூா் விற்பனைக்குழு முதன்மைச் செயலாளா் ஆா்.பாலச்சந்திரன் இத்தகவலைத் தெரிவித்தாா்.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 43 லட்சத்து 47 ஆயிரத்து 79 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது. கடந்த வாரத்தை விட குவிண்டாலுக்கு ரூ.100 விலை அதிகரித்தது. ஏல ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் தா்மராஜ் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com