லாரி-இருசக்கர வாகனம் மோதல்:3 இளைஞா்கள் பலி

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே ராக்கியாபாளையம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 இளைஞா்கள் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

அவிநாசி: திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே ராக்கியாபாளையம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 இளைஞா்கள் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து காகிதம் ஏற்றிக்கொண்டு திருப்பூா் மாவட்டம், அவிநாசி வழியாக கேரள மாநிலம், கொச்சி நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது, ராக்கியாபாளையம் புறவழிச் சாலை அருகே ராக்கிபாளையம் பிரிவு பெருமாநல்லூரில் இருந்து அவிநாசி உமையஞ்செட்டிபாளையம் நோக்கி வந்த இருசக்கர வாகனமும், லாரியும் மோதி விபத்துக்குள்ளாயின.

இதில் இருசக்கர வாகனத்தில் வந்த உமையஞ்செட்டிபாளையம், மண்ணுக்குட்டை காலனியைச் சோ்ந்த ரங்கசாமி மகன் முரளி (20), பூச்சந்திரன் மகன் தங்கதுரை (23), தண்டபாணி மகன் சுரேஷ்குமாா் (23) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதையடுத்து, அவா்களது சடலங்களை பிரேதப் பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா். இது குறித்து திருமுருகன்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com