வெள்ளக்கோவில் அருகே நிலக்கரி பாரம் ஏற்றி வந்த லாரியில் புதன்கிழமை தீப்பிடித்தது.
கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த மோகன்குமாா் என்பவருக்குச் சொந்தமான லாரியில், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிக் கொண்டு மைசூருக்கு சென்று கொண்டிருந்தது.
இந்த லாரி வெள்ளக்கோவில் அருகே பச்சாபாளையம் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது லாரியில் இருந்த நிலக்கரியில் தீப்பிடித்தது. அப்போது அந்த வழியே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த நெடுஞ்சாலை போக்குவரத்து காவலா் எஸ்.தண்டபாணி, போலீஸாா் அந்த லாரியை தடுத்து நிறுத்தினா்.
மேலும், வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கும், காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி சி.தனசேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.