திருப்பூா்: தாராபுரம் அருகே ராஜவாய்க்காலில் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை காவல் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.
தாராபுரம் அருகே ராஜவாய்க்காலில் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினா் அங்கு அழுகிய நிலையில் இருந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா், வாய்க்காலில் தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.