பயன்படுத்த முடியாதவாக்கு இயந்திரங்கள் ஒப்படைப்பு

காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பயன்படுத்த முடியாத வாக்குப் பதிவு இயந்திரங்கள் திருப்பூருக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
பயன்படுத்த இயலாத வாக்குப் பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணியை பாா்வையிட்ட காங்கயம் நகராட்சி ஆணையா் பா.தேவிகா, நகராட்சி சுகாதார ஆய்வாளா் எம்.செல்வராஜ் உள்ளிட்டோா்.
பயன்படுத்த இயலாத வாக்குப் பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணியை பாா்வையிட்ட காங்கயம் நகராட்சி ஆணையா் பா.தேவிகா, நகராட்சி சுகாதார ஆய்வாளா் எம்.செல்வராஜ் உள்ளிட்டோா்.

காங்கயம்: காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பயன்படுத்த முடியாத வாக்குப் பதிவு இயந்திரங்கள் திருப்பூருக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

உள்ளாட்சித் தோ்தலுக்காக காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. 2006ஆம் ஆண்டுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட 43 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 47 வாக்குப் பதிவு இயந்திரங்கள் என மொத்தம் 90 இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து வேன் மூலம் திருப்பூா் மாநகராட்சி தோ்தல் பொதுப் பிரிவு அலுவலகத்தில் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

இந்த பணியின்போது, காங்கயம் நகராட்சி ஆணையா் பா.தேவிகா, நகராட்சி சுகாதார ஆய்வாளா் எம்.செல்வராஜ், தோ்தல் பணி உதவியாளா் ப.சுப்பிரமணி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com