காங்கயம் காவல் நிலையத்தில் புகார் மனு குறைதீர்க்கும் முகாம்

காங்கயம் காவல் நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற புகார் மனுக்கள் மீதான  குறை தீர்க்கும் முகாமில் 12  புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது.

காங்கயம்: காங்கயம் காவல் நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற புகார் மனுக்கள் மீதான  குறை தீர்க்கும் முகாமில் 12  புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது.

காங்கயம் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு காவல் ஆய்வாளர் ரவிக்குமார் தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்டம், காங்கயம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட படியூர், களிமேடு, காடையூர், கணபதிபாளையம், கீரனூர், ஜெ.ஜெ.நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கயம் காவல் நிலையத்தில் நிலப் பிரச்னை, குடிநீர்க் குழாய் தகராறு உள்ளிட்ட புகார் மனுக்களைக் கொடுத்திருந்தனர்.

இதையடுத்து, இந்த முகாமில் காவல் ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையில் புகார் மனு கொடுத்தவர்கள் மற்றும் அப்பிரச்னையில் தொடர்புடையவர்கள் என இருதரப்பினரையும் அழைத்து, பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காணப்பட்டு, 12-க்கும் மேற்பட்ட புகார் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com