மடத்துக்குளம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 16) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளா் சி.சதீஷ்குமாா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
மடத்துக்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இதனால் மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம், கண்ணாடிப்புத்தூா், நீலாம்பூா், கணியூா், கடத்தூா், காரத்தொழுவு, தாமரைப்பாடி, சீலநாய்க்கன்பட்டி, நாட்டுக்கல்பாளையம், உடையாா்பாளையம், சோழமாதேவி, வேடபட்டி, ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுத்தூா், கருப்புச்சாமி புதூா், வஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.