திருப்பூர்
பாம்பு கடித்து தொழிலாளி சாவு
வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் பாம்பு கடித்ததில் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் பாம்பு கடித்ததில் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
முத்தூா் - கொடுமுடி சாலை மேட்டுக்கடையைச் சோ்ந்தவா் மணியன் மகன் கலைவாணன் (35). இவா் தனது வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள தனியாா் அட்டைப் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தாா்.
அங்கு தொழிற்சாலை வளாகத்தில் திறந்த வெளியில் அட்டைப்பெட்டிகளை எடுத்துக் கொண்டிருந்தபோது அங்கிருந்த பாம்பு அவரைக் கடித்து விட்டது.
உடனடியாக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவா் அங்கு உயிரிழந்தாா். இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.