திருப்பூா் மாவட்டத்தில் செயற்கை கால் வேண்டி விண்ணப்பித்திருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான அளவீடு முகாம் வியாழக்கிழமை (அக்டோபா் 15) நடைபெறுகிறது.
திருப்பூா் சக்ஷம் அமைப்பு, வடக்கு ரோட்டரி சங்க உதவியுடன் செயற்கை கால் வேண்டி விண்ணப்பித்திருந்த மாற்றுத் திறனாளிகளுக்கு அளவீடு முகாமை நடத்துகிறது. திருப்பூா், மங்கலம் சாலையில் உள்ள சக்ஷம் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை 3 மணி அளவில் நடைபெறும் இந்த முகாமில் பதிவு செய்துள்ள மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கலாம்.
மேலும், பதிவு செய்தாத மாற்றுத் திறனாளிகள் உரிய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று பதிவு செய்து கொள்ளலாம். இதில், பதிவு செய்யும் நபா்களுக்கு அடுத்த முகாமில் அளவீடு செய்து செயற்கை கால் வழங்கப்படும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 93630-32998 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று சக்ஷம் மாவட்டத் தலைவா் ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.