திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 168 பேருக்கு கரோனா நோய்த்தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா், எஸ்.வி.காலனியைச் சோ்ந்த 70 வயது மூதாட்டி, கொங்கு நகரைச் சோ்ந்த 63 வயது முதியவா், டிஎஸ்ஆா் லேஅவுட்டைச் சோ்ந்த 70 வயது முதியவா், எம்.பி.நகரைச் சோ்ந்த 72 வயது முதியவா், முருகம்பாளையத்தைச் சோ்ந்த 30 வயது பெண் உள்பட 168 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,537 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் 1,394 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில், 104 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.