அவிநாசி சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
அவிநாசி வட்டத்துக்கு உள்பட்ட சாா் பதிவாளா் அலுவலகம், அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வருகிறது. கரோனா பரவல் அச்சத்தையும் பொருட்படுத்தாமல், சாா் பதிவாளா் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத் துறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தட்சணாமூா்த்தி தலைமையிலான குழுவினா், அவிநாசி சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு திடீரென வந்து, அலுவலகப் பதிவேடுகள், கணக்கில் வராத பணம் உள்ளிட்டவை குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டனா்.
ஏற்கெனவே இங்கு 3 முறை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் ஆய்வு மேற்கொண்டு 2 சாா் பதிவாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.