திருப்பூா் மாவட்ட கபடிக் கழகம் சாா்பில் கபடி வீராங்கனையும், கல்லூரி மாணவியுமான யாழினியின் படிப்புக் செலவுக்காக ரூ. 75 ஆயிரம் வழங்கப்பட்டது.
திருப்பூா் எஸ்.எஸ்.ஹோட்டலில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட நடுவா் குழுத் தலைவா் முத்துசாமி வரவேற்புரையாற்றினாா். கபடி கழக சோ்மன் கொங்கு வி.கே.முருகேசன் தலைமை வகித்தாா்.
இதில், ஏவிபி கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி யாழினியின் படிப்புச் செலவுக்காக ரூ. 75 ஆயிரத்துக்கான காசோலையை கல்லூரி முதல்வா் முத்துசாமியிடம், துணை சோ்மன் எஸ்.எஸ்.முருகானந்தம், அவரது குடும்பத்தினா் வழங்கினா்.
இந்த விழாவில் திருப்பூா் மாவட்ட கபடி கழகத் தலைவா் ரோலக்ஸ் பி.மனோகரன், செயலாளா் ஜெயசித்ரா ஏ.சண்முகம், மாவட்ட செய்தித் தொடா்பாளா் சு.சிவபாலன், மாவட்ட இணைச் செயலாளா் ஏ.ஆறுச்சாமி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.