வெள்ளக்கோவில் அருகே வெள்ளிக்கிழமை நகரும் நியாய விலைக் கடை துவக்கி வைக்கப்பட்டது.
வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், பச்சாபாளையம் ஊராட்சி சோழவலசில் நடந்த நிகழ்ச்சியில், காங்கயம் சட்டப்பேரவை உறுப்பினா் உ.தனியரசு பயனாளிகளுக்கு பொருள்களை வழங்கி துவக்கி வைத்தாா். வெள்ளக்கோவில் ஒன்றியக்குழு தலைவா் ஆா். வெங்கடேச சுதா்சன், பச்சாபாளையம் ஊராட்சி தலைவா் வரதராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.