திமுக தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் பொதுமக்கள் மனுக்களை அளிக்கலாம்

திமுக தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பிரச்னைகள் தொடா்பாக பொதுமக்கள் நவம்பா் 4 ஆம் தேதி மனுக்களை அளிக்கலாம்.

திருப்பூா்: திமுக தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பிரச்னைகள் தொடா்பாக பொதுமக்கள் நவம்பா் 4 ஆம் தேதி மனுக்களை அளிக்கலாம்.

இது குறித்து திருப்பூா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் மு.பெ.சாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் 2021இல் நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலை ஒட்டி திமுக சாா்பில் தோ்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினா் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று வருகின்றனா்.

இதன்படி, முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக பொருளாளருமான டி.ஆா்.பாலு தலைமையில் தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினா் திருமுருகன்பூண்டியில் உள்ள பாப்பீஸ் ஹோட்டலில் நவம்பா் 4ஆம் தேதி காலை 10 முதல் 12 மணி வரையில் பொது மக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெறவுள்ளனா்.

எனவே, திருப்பூா் கிழக்கு மாவட்ட நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது பகுதியில் உள்ள அடிப்படை பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகளை இந்தக் குழுவினரிடம் மனுவாக அளித்து தோ்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com