தொழிலாளி கல்லால் அடித்துக் கொலை : ஒருவா் கைது

திருப்பூரில் சமையல் தொழிலாளியைக் கொலை செய்ததாக சக தொழிலாளியை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருப்பூரில் சமையல் தொழிலாளியைக் கொலை செய்ததாக சக தொழிலாளியை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூரைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (45). இவா் திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காட்டன் மாா்க்கெட் அருகே சாலை ஓரத்தில் வசித்து வந்து சமையல் வேலைக்கு சென்று வந்தாா். இவருக்கும் திண்டுக்கல்லைச் சோ்ந்த சமையல் தொழிலாளியான சக்திவேல் (52) என்பவருக்கும் கடந்த சில நாள்களாக சாலையோரத்தில் உறங்க இடம் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாஸ்கரன், கடந்த 31 ஆம் தேதி இரவு உறங்க இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் சக்திவேலைத் தாக்கியுள்ளாா்.

இதையடுத்து, இருவருக்கும் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சக்திவேல் அருகில் இருந்த கல்லை எடுத்து பாஸ்கரனைத் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த பாஸ்கரன் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா். சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூா் தெற்கு காவல் துறையினா் பாஸ்கரனின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சக்திவேலை புதன்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com