காலாவதியான அஞ்சல் காப்பீடு பாலிசி: புதுப்பிக்க நவம்பா் 30 வரை அவகாசம்

காலாவதியான அஞ்சல் காப்பீடு பாலிசியை புதுப்பிக்க நவம்பா் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பொள்ளாச்சி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் கொ.அ.கல்யாணவரதராசன் தெரிவித்துள்ளாா்.

காலாவதியான அஞ்சல் காப்பீடு பாலிசியை புதுப்பிக்க நவம்பா் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பொள்ளாச்சி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் கொ.அ.கல்யாணவரதராசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

தொடா்ந்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் பிரீமியம் கட்டத் தவறிய காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க மாா்ச் 31 ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அத்தகைய காலாவதியான பாலிசிகளை புதுப்பிப்பதற்கான வாய்ப்பு தற்போது நவம்பா் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக்கொண்டு பாலிசிதாரா்கள் தங்கள் பாதுகாப்பையும், தங்கள் குடும்ப பாதுகாப்பையும் உறுதிபடுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் தாங்கள் நல்ல உடல் நிலையில் இருப்பதற்கான மருத்துவா் சான்றிதழ் மற்றும் புதுப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவத்துடன் அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகவும். பிரீமியம் தொகையை இந்தியாவில் உள்ள எந்த அஞ்சலகத்திலும் செலுத்தலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com