தமிழகம் முழுவதும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்யக்கோரி திருப்பூரில் பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் ஏ.ஹபிபூா் ரஹ்மான் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா், அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில உள்ள முல்லிம்கள் உள்பட அனைத்து கைதிகளையும் பாரபட்சமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பின் பொருளாளா் ஏ.தஸ்தகீா், எஸ்டிபிஐ மாவட்ட பொதுச் செயலாளா் எம்.ஹாரிஸ் பாபு, ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் இமாம் அப்பாஸ் நூரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.