பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பல்லடம் ஒன்றியம் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகா் 2ஆவது வாா்டில் சாக்கடை கால்வாய் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் அக்கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளா் ஹாரிஸ்பாபு, கிளை செயலாளா் லியாகத் அலி, தலைவா் ஷேக்பரீத் உள்பட பலா் பங்கேற்றனா்.