கோவை மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினரும், பாஜக மூத்த தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அவா் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:
நான் கரோனா பரிசோதனை செய்து கொண்டேன். பரிசோதனை முடிவு புதன்கிழமை காலை வெளியானதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் சோ்ந்துள்ளேன். மிக விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்புவேன் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.